லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்
லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்
மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884
லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.
மகாத்மா காந்தி பொது சேவை மையம் பந்தலூர் 643233.
ஞாயிறு, 24 நவம்பர், 2013
சனி, 23 நவம்பர், 2013
பந்தலூர் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க பட்டது.
பந்தலூர் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க பட்டது.
இந்திய அரசு நேரு யுவ கேந்திர நீலகிரி மாவட்டம், பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து நடத்திய பந்தலூர் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர் நிலை பள்ளியில் நடைபெற்றது
இப்போட்டியில் பந்தலூர் வட்டாரத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக் பள்ளிகள் உட்பட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனிய நடத்தப்பட்டது
இதில் சூப்பர் சீனியர் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கொளப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளி மாணவி சிவந்தமல்லி முதல் இடத்தினையும் புனித சேவியர் பள்ளி மாணவி காயத்திரி இரண்டாம் இடத்தினையும் பெற்றனர் . ஆண்கள் பிரிவில் பிதர்காடு அரசு பள்ளி மாணவன் ஜுனைஷ் முதல் இடத்தினையும் தேவாலா ஹோலி கிராஸ் பள்ளி மாணவன் பிரவீன் இரண்டாம் இடத்தினையும் பெற்றனர்.
சீனியர் 17வயதுக்குட்பட்டோரில் பெண்கள் பிரிவில் பந்தலூர் டியூஸ் பள்ளி மாணவி ஜெரால்டு மரிய சுவேதா முதல் இடத்தினையும் புனித சேவியர் பள்ளி மாணவி ஆரோக்கிய டால்மியா இரண்டாம் இடத்தினையும் பெற்றனர் . ஆண்கள் பிரிவில் எம் எஸ் எஸ் பள்ளி மாணவன் அபிஜித் முதல் பரிசினையும் எருமாடு அரசு பள்ளி மாணவன் அனூப் இரண்டாம் இடத்தினையும் பெற்றனர்
ஜூனியர் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் புனித சேவியர் பள்ளி மாணவி சிந்தியா முதல் இடத்தினையும், கையுன்னி பள்ளி மாணவி ஜான்சி புளோரா இரண்டாம் இடத்தினையும் பெற்றனர் ஆண்கள் பிரிவில் பக்கனா அரசு பள்ளி மாணவன் ஷம்னாஜ் முதல் இடத்தினையும் கையுன்னி பள்ளி மாணவன் அஜய் இரண்டாம் இடத்தினையும் பிடித்தனர்.
பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் காந்தி சேவை மைய அமைப்பாளர் நௌசாத் தலைமை தங்கினார். கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பள்ளி ஆசிரியர்கள் உஷா மார்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ்கலை வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், பந்தலூர் புனித சேவியர் பள்ளி தாளாளர் ஜான்சி ஆகியோர் வழங்கினார்கள்.
சதுரங்க விளையாட்டு போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க பட்டது
சனி, 24 ஆகஸ்ட், 2013
சாதித்த மாணவியருக்கு பரிசு, பண முடிப்பு
பந்தலூர்
மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் பந்தலூர் புனித சேவியர்
பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வில் சாதித்த மாணவியருக்கு பரிசு, பண முடிப்பு வழங்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடந்த
நிகழ்ச்சியில் செயலாளர் சந்திரன் வரவேற்றார். அமைப்பாளர் நவுசாத் தலைமை
வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக
பங்கேற்ற டாக்டர் கதிரவன் கடந்த
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முதலிடம் பிடித்த மாணவி பிரியங்காவுக்கு
நினைவு பரிசு மற்றும் பணமுடிப்பு வழங்ககினார்.
பள்ளி தலைமையாசிரியை செலீன்
பேசினார்.
நிகழ்ச்சியில் மைய
நிர்வாகிகள் செந்தாமரை, செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மைய நிர்வாகி
சிவசங்கரன்
நன்றி கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





















































