லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்
லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்
மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884
லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.
மகாத்மா காந்தி பொது சேவை மையம் பந்தலூர் 643233.
வியாழன், 22 ஆகஸ்ட், 2024
புதன், 17 பிப்ரவரி, 2016
CCHEP 2016 EYE CAMP CHERAMBADI 14.02.2016
பந்தலூர் 2016 பிப் 15
பந்தலூர் அருகே சேரம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைப்பெற்றது.
கூடலூர் நுகா்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,
கிரின்வுட் பவுண்டேசன், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம், ஆகியன இணைந்து நடத்திய
இந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சந்திரபோஸ், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும் உதகை அரசு கண் மருத்துவமனை கண் மருத்துவருமான மருத்துவர் அமராவதிராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ஐந்து பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
S. Sivasubramaniam President

CCHEP 2016 GANTHI ANNIVERSARY 31.01.2016
ஜனவரி 30 2016
பந்தலூர் பஜாரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் உருவபடத்திற்கு மலர்மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அவரது கொள்கைகள், கோட்பாடுகள், செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. தூய்மை இந்தியா, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட உறுதிமொழிகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், ஆலோசகர் காளிமுத்து, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற மாவட்ட சித்தா மருத்துவஅலுவலர் கணேசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் காந்தி சேவை மைய நிர்வாகிகள் அகமது கபீர், அபதாகீர், பிரபு பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இந்திராஜித், தணிஸ்லாஸ்,
நாட்டு நலப்பணிதிட்ட மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)