லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

வியாழன், 14 ஜூலை, 2011

சாதித்தவர்களுக்கு கவுரவம்

பந்தலூர் : பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
          பந்தலூரில் செயல்பட்டு வரும் காந்தி பொது சேவை மையம் சார்பில், பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மையத்தின் அமைப்பாளர் நவுசாத் வரவேற்றார். 
        பிளஸ் 2 வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற தியாகராஜா, பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற விந்துஜா ஆகியோருக்கு, பந்தலூர் துணை தாசில்தார் குமார்ராஜா பணமுடிப்பு மற்றும் கேடயம் வழங்கினார். 
              பள்ளி தலைமையாசிரியர் சாமுலேசன் தலைமை வகித்தார். 
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்ப மைய தலைவர் சிவசுப்ரமணியம், பி.எஸ்.என்.எல். அதி­காரி முத்துகிருஷ்ணன், மையத்தின் தலைவர் தாஸ் முன்னிலை வகித்தனர். 
    நிகழ்ச்சியில் காந்திசேவை மைய நிர்வாகிகள் சுரேஷ், ஜாபர்சாதிக், செந்தாமரை, சாதிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செவ்வாய், 5 ஜூலை, 2011

ஆதிவாசி மாணவிக்கு பரிசு

ஆதிவாசி மாணவிக்கு பரிசு 
 
 
 ஜூலை 2: கூடலூர் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஆதிவாசி மாணவி சந்திரிகாவுக்கு காந்தி சேவா மையம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது ஜ் பரிசளிப்பு விழாவில் தலைவர் தாஸ், செயலாளர் சந்திரன், நவுஷாத், துணைத் தலைவர் அகமது கபீர், செயற்குழு உறுப்பினர்கள், சேரன் அறக்கட்டளையின் தலைவர் தங்கராஜ், நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 

முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசும் கல்வி ஊக்கத்தொகை

செவ்வாய், 5 ஜூலை, 2011 பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளியில் கடந்த பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசும் கல்வி உக்கத்தொகையும் வழங்கப்பட்டது


பந்தலூர் மகாத்மா  காந்தி பொது  சேவை  மையம்  சார்பில் 2011 மார்ச் மதம் நடந்த போது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு   பரிசும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது
பந்தலூர் அரசு மேல் நிலை  பள்ளி யில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சமுலேசன் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு. சிவசுப்ரமணியம் கூடலூர் கூட்டுறவு பண்டகசாலை மேற்பார்வையாளர் செல்வராஜ் பி எஸ் என் எல் முத்து கிருஷ்ணன் காந்தி சேவை மைய அமைப்பாளர் நௌசாத் தலைவர் தாஸ் செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை வட்டாச்சியர் குமாரராஜா  பனிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்  தியகராஜாவிற்க்கும் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி விந்துஜவிற்க்கும் கேடயம் மற்றும், கல்வி உதவித்தொகை ரூ.1000 /- வழங்கினார் .
நிகழ்ச்சியில் மைய நிர்வாகிகள் சுரேஷ் ஜாபர் சாதிக் செந்தாமரை சாதிக் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்