லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

சனி, 31 ஜனவரி, 2015

பந்தலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் 31.01.2015


பந்தலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பந்தலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை  தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மைய  செயலாளர் பொன் கணேசன்,  ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் செயலர் சுப்பிரமணி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், சமுக ஆர்வலர்கள் காளிமுத்து செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பந்தலூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் கணேஷன் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் அமராவதி ராஜன்   உதகை அரசு மருத்துவமனை கண் மருத்துவ குழுவினர் கண் நோயினால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 150.கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  இதில் 20 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் முகாமில் சேவை புரிந்தனர்.
முகாமில் கண் தொழில் நுட்புனர் கலாவதி ஸ்ரீதர், கூடலூர்  நுகர்வோர் மைய துணை தலைவர் செல்வராஜ், மைய ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகி  சந்திரன்,  மருத்துவமனை உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


















கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
















pls visit our webs http://cchepnlg.blogspot.in http://cchepeye.blogspot.in http://consumernlg.blogspot.in

வியாழன், 29 ஜனவரி, 2015

மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினத்தினை முன்னிட்டு

பந்தலூர் பஜாரில் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  மகாத்மா காந்தி கடந்த 1948ம் ஆண்டு சுட்டு கொல்லப்பட்டதன் 67வது நினைவு தினத்தினை முன்னிட்டு பந்தலூரில் நடைபெற்ற நினைவு தினத்திற்கு மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் தலைவர் நவுசாத் தலைமை தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், ஓய்வு பெற்ற மருந்தாளுனர் ஆண்டனி,  மகாத்மா காந்தி பொது சேவை மைய துணை தலைவர் அகமது கபீர்  முன்னிலை வகித்தார்.  மைய நிர்வாகிகள் சலீம், ராஜாராம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் உருவபடத்திற்கு மலர் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மது இல்லா தமிழகத்தினை உருவாக்க தமிழக அரசினை வலியுறுத்துவது, மதுவின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, போதையின் பிடியில் சிக்கியவர்களை உரிய சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்க மாவட்டந்தோறும் மறுவாழ்வு மையங்களை அமைக்க அரசை வலியுறுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.  









http://cchepnlg.blogspot.in/







http://cchepnlg.blogspot.in/


http://cchepnlg.blogspot.in/http://cchepnlg.blogspot.in/

வெள்ளி, 23 ஜனவரி, 2015

நேதாஜி யின் 119 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.


பந்தலூரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நேதாஜி யின்  119 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு  மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் தலைமை தாங்கினார்.   மகாத்மா காந்தி சேவை மைய நிர்வாகிகள் செந்தாமரை, ராம் பிரசாத் முன்னிலை வகித்தனர்.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,  பந்தலூர் அரசு பள்ளி இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன்சன்,  நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், மகாத்மா காந்தி சேவை மைய துணை தலைவர் அகமது கபீர் ஆகியோர் நேதாஜியின் வாழ்க்கை மற்றும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பு, தேசிய மாணவர் படை, அவரின் வாழக்கை இலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது குறித்து விளக்கம் அளித்தனர்.  
நேதாஜியின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது.  இனிப்பு வழங்க பட்டது.
நிகழ்ச்சியில் பந்தலூர் அரசு பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நுகர்வோர் மைய மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/





 பந்தலூரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நேதாஜி யின்  119 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு  மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் தலைமை தாங்கினார்.   மகாத்மா காந்தி சேவை மைய நிர்வாகிகள் செந்தாமரை, ராம் பிரசாத் முன்னிலை வகித்தனர்.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,  பந்தலூர் அரசு பள்ளி இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன்சன்,  நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், மகாத்மா காந்தி சேவை மைய துணை தலைவர் அகமது கபீர் ஆகியோர் நேதாஜியின் வாழ்க்கை மற்றும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பு, தேசிய மாணவர் படை, அவரின் வாழக்கை இலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது குறித்து விளக்கம் அளித்தனர்.  
நேதாஜியின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது.  இனிப்பு வழங்க பட்டது.
நிகழ்ச்சியில் பந்தலூர் அரசு பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நுகர்வோர் மைய மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.