லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

ஞாயிறு, 14 ஜூன், 2015

இரத்த பரிசோதனை முகாம்






















மகாத்மா காந்தி பொது  சேவை மையம் அப்பல்லோ  இரத்த பரிசோதனை  நிலையம் கோவை  ஆகியன இணைந்து பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் இரத்த பரிசோதனை முகாமினை நடத்தின 

இம்முகாமில் இரத்த அழுத்தம்,  இரத்தத்தில் சர்க்கரை  அளவு, HP  அளவு, கொழுப்பு அளவு உள்ளிட்ட  இரத்த சம்பத்தமான  பரிசோதனைகள் மேற்கொள்ள பட்டன.  

முகாமிற்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார்.  மைய தலைவர் நௌசாத், துணை செயலாளர் 
சுரேஷ் , முன்னாள்  தலைவர் தாஸ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்பலோ இரத்த பரிசோதனை நிலைய  இயக்குனர் லயன் .அலாவுதீன், மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ் , இரத்த பரிசோதகர்கள் சேகர், ரூபி சாலினி, ப்ரியா,  பூபதி,  கனகசுப்பிரமணியம்   உள்ளிட்டோர்  இரத்த பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

முகாமில் பலர் கலந்து கொண்டு இரத்த பரிசோதனை செய்து கொண்டனர்.

மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள்  சலீம், ஓம் குமார்,  கபீர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.