லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

வியாழன், 24 செப்டம்பர், 2015

தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் பல்வேறு அரசுதனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி,கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்பட்டு நுகர்வோர் குறித்த விழிப்புணர்வு பணிகளைமேற்கொண்டு வருகிறதுஇதனால் பொதுமக்களிடையே நுகர்வோர் கல்வி அதிகரித்து வருகிறதுஇந்நிலைதொடர இன்னும் பல பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவக்கி சிறப்புடன் செயல்படுத்தவிரும்புகின்றனஆனால்பல பள்ளிகளில் தங்களின் சொந்த முயற்சியினால் கடந்த 8 ஆண்டுகளாககுடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவங்கியும் அவர்களுக்கு இதுவரை நிதி வழங்கப்படாமல் உள்ளது.இதனால் இந்த பள்ளிகளின் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் செயல்பாடுகள் கேள்வி குறியாக உள்ளது.
நுகர்வோர் விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த, உணவு ​​பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கடந்த 2006-ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மன்றங்களின் செயல்பாட்டுக்கும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது, விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் 2006-2008-ம் ஆண்டுகளில் ​தேர்வு​ செய்யப்பட்ட மன்றங்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்பட்டது.  இந்நிலையில் 2009-ல் உதவித் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.2,500 ஆக குறைக்கப்பட்டது. 2011-ம் ஆண்டிலிருந்து அத் தொகையும் வழங்கப்படவில்லை.
இதனால் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உலக உணவு தினம், தர நிர்ணய தினம், நுகர்வோர் பாதுகாப்பு தினம் உள்ளிட்ட பல்வேறு தினங்களிலும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க முடியவில்லை. நுகர்வோர் விழிப்புணர்வு பயணங்களை மாணவர்கள் மேற்கொள்ள முடியவில்லை
நுகர்வோர் கல்வி மக்களிடையே அதிகரிக்க பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள்பெருமளவு உதவியுள்ளதுஇது தொடர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும்.தற்போது இம்மன்றங்களில் உள்ள மாணவர்களுக்கு கையேடு மற்றும் துண்டு பிரசுரங்கள் கூட வழங்கமுடியாத நிலையில் சில பள்ளிகள் உள்ளனஇதனால் நுகர்வோர் விழிப்புணர்வு பெயரளவு மட்டுமே உள்ளது.
பள்ளிகளில் செயல்படும் இதர சார்பு அமைப்புக்களான என்எஸ்எஸ்., என்சிசி., தேசிய பசுமைப்படைஇளம்செஞ்சுலுவை சங்கம் போன்ற அமைப்புக்களுக்கு உரிய காலத்திற்குள் நிதி வழங்கப்படுகிறதுஇதனால்இவைகள் சிறந்த முறையில் செயல்படுகின்றனஆனால் நுகர்வோர் மன்றங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி கடந்தஆண்டுகளாக வந்து சேரவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
மத்திய அரசிடம் நுகர்​வோர் விவகாரங்கள் அ​மைச்சகத்திடம் நுகர்​வோர் விழிப்புணர்வு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் நுகர்வோர் பாதுகாப்பு நிதி உள்ளதாக தகவல்கள் உள்ளன. அதை மாநில அரசு சார்பில்​ கேட்டுப் பெற வேண்டும். அவ்வாறு பெற்றால் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் சிரமங்கள் இருக்காது.
இதனால் நுகர்வோர் விழிப்புணர்வு பொதுமக்களிடையே போய் சேருவது என்பது கேள்வி குறியாகவேஉள்ளதுதொடர்ந்து நிதி வழங்கப்படாதபட்சத்தில் அடிப்படை செயல்பாடுகள் கூட இல்லாமல் நுகர்வோர்மன்றங்கள் முடங்கிவிடும்எனவே இதுநாள் வரை சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு அரசு உடனடியாக நிதிவழங்கி குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை ஊக்குவிக்க வேண்டும்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஊழல் ஒழியும் வரை வாகனங்களில் ஏற மாட்டேன்:'நடைமன்னன்' நூதன சபதம்





பந்தலுார்:பந்தலுாரை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஊழல் ஒழியும் வரை வாகனத்தில் ஏறுவதில்லை என்ற உறுதியுடன் வலம் வருகிறார்.

நீலகிரி மாவட்டம் பந்தலுாரை சேர்ந்த, அப்துல் லத்தீப் -- கபருன்னிசா தம்பதியரின் மகன் நவுசாத், 32. இவர், சிறுவயது முதலே எந்த வாகனத்திலும் ஏறியதில்லை. பெற்றோர் பலமுறை வற்புறுத்தியும், வாகனங்களில் ஏறுவதில்லை. உள்ளுரிலேயே வசிப்பதால், எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்று வருகிறார். இதனால், இவருக்கு 'நடைமன்னன்' என்ற பெயர் உள்ளது.
ஊழலை முழுமையாக ஒழிக்க, 'மகாத்மா காந்தி பொது சேவை மையம்' எனும் அமைப்பை துவக்கி, அதில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகளை ஒருங்கிணைத்து, பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சுய சம்பாத்தியத்தை கொண்டு, அரசு பொதுத் தேர்வுகளில் சாதிக்கும் மாணவர்களுக்கு உதவி வருகிறார்.
நவுசாத் கூறுகையில், “நான் இதுவரை வாகனங்களில் பயணம் செய்ததில்லை. 10 கி.மீ., தொலைவில் உள்ளஎல்லா பகுதிகளுக் கும் நடந்துதான் செல்கிறேன். இது என் கிராம மக்களுக்கும் தெரியும். வெளியூர், பிற மாநிலங்களுக்கு இதுவரை சென்றதில்லை. ஊழல் ஒழியும் வரை, வாகனத்தில் ஏறுவதில்லை என முடிவு செய்துள்ளேன்,” என்றார்.

நவுசாதின் தந்தை அப்துல்லத்திப் கூறியதாவது:நவுசாத், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தற்போது, உள்ளூரில் உள்ள ஒரு ரேஷன் கடையில், தற்காலிக பணியாளராக உள்ளார். எங்களுக்கு கடை மற்றும் தோட்டங்கள் உள்ளன; மூன்று வாகனங்கள் உள்ளன.சிறுவயது முதலே, நவுசாத் வாகனங்களில் ஏற பயப்படுவார்; நாங்களும் கட்டாயப்படுத்துவதில்லை. அதனால், அவரை எங்கும் கூட்டி செல்வதுமில்லை. இதுவரை அவர் வெளியூர்களுக்கு சென்றதில்லை. அடிப்படையில் சேவை மனப்பான்மை உள்ளவர் என்பதால், தனது வினோத குணத்தை ஊழலை ஒழிக்க பயன்படுத்துகிறார்.இவ்வாறு, அவர் கூறி னார்.