லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

வெள்ளி, 29 ஜூலை, 2016

மாபெரும் இரத்த தான முகாம்


கூடலூர் பாரதியார் கலை  அறிவியல் கல்லூரி நட்டு நலப்பணி திட்டம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம். உதகை அரசு மருத்துவ மனை தலைமை இரத்த வங்கி. நெலாக்கோட்டை  சமுதாய சுகாதார நிலையம் மாவட்ட எயிட்ஸ் கட்டுப்பட்டு மையம். இந்திய அரசு நேரு யுவ கேந்திரா  ஆகியன இனைந்து கூடலூர் கல்லூரியில் மாபெரும் இரத்த தான முகாமினை நடத்தின.

அப்துல் கலாம்  அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்திய இந்த முகாமிற்க்கு நெலாக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் ஆலோசகர் காளிமுத்து தேவாலா பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.

உதகை தலைமை மருத்துவ மனை மருத்டுவ அலுவலர் நவாஸ் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கல்லூரி நட்டு நலப்பணி திட்ட மாணவர்களிடம் இரத்தம் சேகரித்தனர். 50 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கினார்கள்.  இவை உதகை கூடலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று ஏழை எளிய நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்

முகாமிற்க்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மகேஸ்வரன். சிவசங்கரன். மேரி சுஜி உள்ளிட்ட அலுவலர்கள் செய்து இருந்தனர்.
முகாமில் கூடலூர் வருவாய் ஆய்வாளர் கணிசுந்தரம். நாடுகானி  கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல். சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக